Tuesday, November 5, 2013

மங்கள்யான்!

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கானச் சாத்தியங்களை ஆராய உருவாக்கப்பட்ட இந்தியாவின் 450 கோடி ரூபாய்ச் சொத்து இன்று பிற்பகல் 2:38 மணிக்கு சும்மா ஜொய்ங்குனு கிளம்பிருச்சுங்கிறது தான் செய்தி. அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் இந்த மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை அடையும் என்பது கணிப்பு. அப்படி நடக்கையில், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய கூட்டமைப்பைத் தொடர்ந்து, மார்ஸ் மிஷனை வெற்றிகரமாக முடித்துக் காட்டிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட நாற்பது முயற்சிகளில் சீனாவின் முயற்சி உட்பட மொத்தம் இருபத்து முன்று முயற்சிகள் மண்ணைக் கவ்வியிருக்கின்றன என்ற உண்மை இந்த மிஷன் எவ்வளவு சவாலானது என்பதை ஒரளவிற்கு உணர்த்தவே செய்கிறது.

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படுகிறதால் ‘மங்கள்’யான் என்று பெயர், அது சரி. ஆனால் அதையும் செவ்வாய்க் கிழமையன்று தான் ஏவ வேண்டுமா? தாங்க முடியல உங்க செவ்வாய் மோகம்!!

# செவ்வாயன்று செவ்வாய்க்கு ஒரு செவ்வாயே பறக்கிறதே.. அடடே.. ஆச்சர்யக்குறி!

No comments:

Post a Comment