Tuesday, November 26, 2013

நவம்பர் 26

முன்பின் பழக்கமில்லாத ஒரு நபரை காப்பாற்ற,
முன்பின் பழக்கமில்லாத ஒரு பெரும் வலியை,
முன்பின் பழக்கமில்லாத ஒரு கரும் இருளை,
முன்பின் பழக்கமில்லாத ஒரு கலையாத் தூக்கத்தை,
முன்பின் பழக்கமில்லாத ஒரு கொடிய பிரிவை,
முன்பின் பழக்கமில்லா,
முகமளவில் கூடப் பரிட்சயமில்லாத
ஏதோவொரு நபரின் கைகளில் இயங்கும்
ஏகே47 துப்பும் குண்டுகளிடம்,
வரமாய் பெற்றிட,
நம்மில் யாரேனும் தயாராய் இருக்கிறோமா?

26/11 மும்பை தாக்குதல் பற்றிய இரத்தக்கறை அகலா நினைவுகள் என்னை துருவித் துருவிக் கேட்பது இந்த கேள்வியைத் தான்.

No comments:

Post a Comment