#1
பெங்களூரில் ஏடிஎம் அறையில் பெண் தாக்கப்பட்ட சிசிடிவி பதிவினை இப்பொழுதுதான் பார்த்தேன். அந்த பெண்மனி தற்போது கோமாவில் கிடக்கிறாள் என்ற செய்தியைவிட கொஞ்சமும் மனுஷத்தன்மை காட்டாத அந்த காட்டுமிராண்டி இன்னும் எங்கோ சுதந்திரமாய் சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான் அதிகமாய் பாதிக்கிறது.
பெங்களூரில் ஏடிஎம் அறையில் பெண் தாக்கப்பட்ட சிசிடிவி பதிவினை இப்பொழுதுதான் பார்த்தேன். அந்த பெண்மனி தற்போது கோமாவில் கிடக்கிறாள் என்ற செய்தியைவிட கொஞ்சமும் மனுஷத்தன்மை காட்டாத அந்த காட்டுமிராண்டி இன்னும் எங்கோ சுதந்திரமாய் சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான் அதிகமாய் பாதிக்கிறது.
#2
ஒவ்வொரு ஏடிஎமுக்கும் ஒரு செக்யூரிட்டி கட்டாயம் என அறிவித்து அனைத்து வங்கிகளுக்கும் மூன்று நாள் கெடு விதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எல்லாம் சரி. அவர்கள் நியமிக்கும் அந்த நபர் நாற்பது ஐம்பது வயது கடந்தவராக இல்லாமல், இத்தகைய காட்டுமிராண்டிகளை கையாளத் தக்கவராக இருப்பின் சந்தோஷமே.
ஒவ்வொரு ஏடிஎமுக்கும் ஒரு செக்யூரிட்டி கட்டாயம் என அறிவித்து அனைத்து வங்கிகளுக்கும் மூன்று நாள் கெடு விதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எல்லாம் சரி. அவர்கள் நியமிக்கும் அந்த நபர் நாற்பது ஐம்பது வயது கடந்தவராக இல்லாமல், இத்தகைய காட்டுமிராண்டிகளை கையாளத் தக்கவராக இருப்பின் சந்தோஷமே.
#3
பெங்களூரு ஏடிஎம் தாக்குதல் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் அந்த நபர் பற்றி தகவல் கொடுப்பவர்க்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது காவல்துறை. இப்பொழுது யாராவது அந்த நபரை பிடிக்க உதவி, அந்த ஒரு லட்ச ரூபாய் பெற்று, தாக்கப்பட்ட அந்த பெண்மணியின் மருத்துவ செலவுக்கே கொடுத்தால், அது மனித நேயம்.
பெங்களூரு ஏடிஎம் தாக்குதல் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் அந்த நபர் பற்றி தகவல் கொடுப்பவர்க்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது காவல்துறை. இப்பொழுது யாராவது அந்த நபரை பிடிக்க உதவி, அந்த ஒரு லட்ச ரூபாய் பெற்று, தாக்கப்பட்ட அந்த பெண்மணியின் மருத்துவ செலவுக்கே கொடுத்தால், அது மனித நேயம்.
No comments:
Post a Comment