Tuesday, November 19, 2013

காதலும்.. பெண்மையும்..

அடியே கள்ளி..

என் மீதான
ஆசைகளை எல்லாம்
கண்களால் பேசிவிட்டு,
கோபங்களை மட்டும்
ஏனோ
உதட்டால் பேசிவிடுகிறாய்!

கேட்டால்..
இதில் தான்
பெண்மை வாழ்வதாகச் சொல்கிறாய்!

எங்கே,
இன்றொரு நாள் மட்டும்..

உனது ஆசைகளை
உதடுகளால் பேசிவிட்டு,
கோபங்கள் இருப்பின்
அதை உன்
கண்களால் பேசிப் பாரேன்!

பார்க்கிறேன் நானும்..
எதில் பெண்மை அதிகமென்று!!

No comments:

Post a Comment