Friday, October 25, 2013

அவள் பிறந்த நாள்!!

வெயில் மங்கியிருந்த ஒரு மதிய வேளையில் அவள் வீடு திரும்பியிருந்தாள். ஒரு எட்டு வயது உடல் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு கத்திக் கீறலை தைரியமாகத் தாங்கியிருந்தாள் என்பது எனக்குத் தெரியும். அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழைய மறுத்தபடி அம்மாவை பார்த்து அவள் அழுத நிமிடங்கள் பற்றி அம்மா சொல்லியிருந்தது நினைவிற்கு வந்தது. எப்படி இருக்கு இப்போ? வலிக்குதா? என்றெல்லாம் கேட்கத் தோன்றவில்லை. அவளாகவே எழுந்து போகும் வரையில் அவளை என் மடியில் படுக்க வைத்துக்கொள்ள வேண்டும் போலத் தோன்றியது. அதுவரையில் உடன் விளையாடும் குழந்தையாக, அவ்வப்போது சண்டை போட்டுக் கொள்ளும் தோழனாக, அவளது பொய்க் கண்ணீரால் அப்பாவிடம் எப்போதும் வசை வாங்கும் அண்ணனாக மட்டுமே உணர்ந்திருந்த என்னை, முதன் முறையாக தந்தை ஸ்தானத்தை உணரச் செய்த அவளின் ஒரு ஏக்கப் பார்வை இன்னும் என் கண்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

கடவுள் எனக்கு ஒரு தங்கையை பரிசளித்த நாள் இது.

No comments:

Post a Comment