Wednesday, September 30, 2015

கைய புடிச்சு இழுத்தியா பா?

அவசரமா பஞ்சாயத்தக் கூட்டிருக்கீங்க.. என்ன விவகாரம்?

அது வேற ஒன்னும் இல்லைங்கைய்யா.. இத்தன நாளா நம்ம மோடி ஊர்ல இல்ல..

அதான் தெரிஞ்ச விஷயமாச்சே!

அட அது இல்லைங்கையா.. நம்ம ஊரு நிம்மதியா இருந்துச்சு. நேத்து தான் வந்தான். வரும்போதே ஒரு பிரச்சனையோட வந்துட்டான்.

என்ன பிரச்சன?

அதே நிக்குதே மூதேவி.. அதோட பிரச்சன தான். ஃபேஸ்புக் ஓனர் காமிராவ மறைக்குறான்னு சொல்லிட்டு, கைய பிடிச்சு இழுத்துட்டான்.

ஏற்கனவே டிஜிட்டல் இந்தியாக்கு சப்போர்ட் பண்ற மாதிரி நம்மள அவனுங்க கலாய்ச்சுபுட்டானுங்க. இதுல இந்த தகராறு வேறயா?

ஏம்பா தம்பி, அந்த மார்க்க கைய பிடிச்சு இழுத்தியா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

மார்க்க கைய பிடிச்சு இழுத்தியா பா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா பா?

ஏன் தம்பி.. மார்க் தம்பிய கைய பிடிச்சு இழுத்தியா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

ஏற்கனவே டிஜிட்டல் இந்தியானு சொல்லி நம்மாளுங்க ப்ரொபைல் பிக்சருக்கு தேசியக்கொடிச் சாயம் பூசி அவனுங்க கலாய்ச்சுபுட்டானுங்க.

என்ன கலாய்ச்சுபுட்டானுங்க?

ஏன்யா.. நான் சரியா பேசுறனா?

சரியாத்தான் இருக்கு.

இப்ப நீ கைய பிடிச்சு இழுத்ததுனால புதுசா யோசிச்சு கலாய்ப்பானுங்க.

என்ன கலாய்ப்பானுங்க?

ஏன்யா நான் சரியா பேசுறனா?

ரொம்ப கரெக்ட்!

டூர விட்டுறு..

என்ன டூர விட்டுறு?

மார்க்க கைய பிடிச்சு இழுத்தியா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

என்னயா நினைச்சுட்டு இருக்கான் அவன்?

அவன் பயங்கராமான ஊர் சுத்தி மங்கன். வேறெங்கேயும் பறக்குறதுக்கு முன்னாடி கேப் விடாம பேசுங்க.

என்ன கேப் இல்லாம பேசுங்க?

நான் பேசுறது உனக்கு புரியுதாயா? புரியுதாயா.. உனக்கு புரியுதாயா?

கைய பிடிச்சு இழுத்தியா டா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா டா?

இரு டா தண்ணி…

என்ன இரு டா…..

கைய பிடிச்சு இழுத்தியா டா?

டேய் உன்னால நான் அடி வாங்குறேன் டா..

எதையாவது புடிச்சு இழுத்தியா டா… ஏன்யா உயிர வாங்குற..

கைய பிடிச்சு இழுத்தியா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

கைய பிடிச்சு இழுத்தியா டா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா டா?

ஐயா உக்காந்து பேசலாம் யா..

இந்த மாதிரி மொள்ளமாரி பயலுக்கெல்லாம் பஞ்சாயத்து பண்ண கூப்பிடாதீங்க.. மனுஷனா இவன்..

என்ன மனுஷனா இவன்?

ஐயா… கோவப்படாதீங்க!

என்ன கோவப்படாதீங்க?

பொறுமையா இருங்க!

என்ன பொறுமையா இருங்க?

வீட்டுக்குப் போங்க!

என்ன வீட்டுக்குப் போங்க?

ஐயா நீங்களே இப்படி..

என்ன நீங்களே?

ஐயா!!

என்ன ஐயா?

ஐயா!!!

என்ன ஐய்யயா??

ஐயோ.. தலையே குழம்பிட்டாரே!!

ஏம்பா.. நோக்கு சந்தோஷம் தானே.. நல்லாயிருந்த மனுஷன இப்படி பண்ணிட்டியே?

என்ன இப்படி பண்ணிட்டியே?

திரும்ப திரும்ப பேசுற நீ!

என்ன திரும்ப திரும்ப பேசுற நீ?

திரும்ப திரும்ப பேசுற நீ!

என்ன திரும்ப திரும்ப..

திரும்ப திரும்ப பேசுற நீ!

திரும்ப திரும்ப பேசுற நீ!

திரும்ப திரும்ப பேசுற நீ!

திரும்ப திரும்ப பேசுற நீ!

திரும்ப திரும்ப பேசுற நீ!

திரும்ப திரும்ப பேசுற நீ!

ஏம்பா.. தலைவர் தப்பிச்சுட்டாரு… ஐயர் போயே போய்ட்டாரே!!

என்ன போயே போய்ட்டாரே?

ஐயோ ஆள விடு!!

ஹப்பாடா.. மறைக்க ஒரு பயலும் இல்ல.. இப்போ எடுத்துட்டு வாங்கடா காமிராவா.. மோடியா.. கொக்கா… யார் கிட்ட..

Friday, September 25, 2015

Marsல் இருந்து மங்கள்யான்!

நவம்பர் 5, 2013 எழுதிய பதிவிலிருந்து..

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கானச் சாத்தியங்களை ஆராய உருவாக்கப்பட்ட இந்தியாவின் 450 கோடி ரூபாய்ச் சொத்து இன்று பிற்பகல் 2:38 மணிக்கு சும்மா ஜொய்ங்குனு கிளம்பிருச்சுங்கிறது தான் செய்தி. அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் இந்த மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை அடையும் என்பது கணிப்பு. அப்படி நடக்கையில், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய கூட்டமைப்பைத் தொடர்ந்து, மார்ஸ் மிஷனை வெற்றிகரமாக முடித்துக் காட்டிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட நாற்பது முயற்சிகளில் சீனாவின் முயற்சி உட்பட மொத்தம் இருபத்து முன்று முயற்சிகள் மண்ணைக் கவ்வியிருக்கின்றன என்ற உண்மை இந்த மிஷன் எவ்வளவு சவாலானது என்பதை ஒரளவிற்கு உணர்த்தவே செய்கிறது.

செப்டம்பர் 25, 2015 – இன்று

மங்கள்யான் செவ்வாய் கிரகச் சுற்றுப் பாதையை அடைந்து நேற்றோடு ஒரு வருடம் நிறைவானது. 2013 நவம்பர் 5ஆம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்டிருந்தாலும் நவம்பர் 29 வரை பூமியின் சுற்றுப்பாதையிலே இருந்து தனது அடுத்தக்கட்ட மிக முக்கியப் பயணத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டு, இந்திய நேரப்படி நவம்பர் 30 காலை 5:30 மணிக்கு தனது செவ்வாய் கிரகப் பயணத்தை தொடங்கிய மங்கள்யான், 298 நாட்கள் விண்ணில் பயணித்து செப்டம்பர் 24, 2014 ஆம் தேதி செவ்வாய் கிரகச் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது.

மங்கள்யானின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை கொண்டாடும் வகையில், இந்த ஒரு வருடத்தில் மங்கள்யான் எடுத்த சில புகைப்படங்களை ISRO “Mars Atlas” என்ற தொகுப்பாய் வெளியிட்டுள்ளது. அதை தரவிறக்கம் செய்ய விரும்புவோர் இங்கே க்ளிக் செய்யவும்.

வெல்டன் மங்கள்யான் and டீம்!

கூடுதல் செய்தி:

ISRO தனது செவ்வாய் கிரக ஆராய்ச்சியின் இரண்டாம் கட்டத் திட்டமான மங்கள்யான் 2 விண்கலத்தை 2018-2020 ல் செவ்வாய் கிரகச் சுற்றுப்பாதையில் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை, அது செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கவும், NASA வின் Curiosity போன்றதொரு Mars Rover ஐ நிறுவவும் திறன் கொண்டிருக்கும்.

Wednesday, September 23, 2015

எங்கே போகிற தெந்தன் தேசம்!

#1
சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில் வேலை வாய்ப்பின்மையின் விகிதம் கூடியிருப்பதற்குக் காரணம் எல்லா துறைகளிலும் பெண்கள் பணிபுரியத் தொடங்கியதே என்ற கேவலமானக் கருத்தை பத்தாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் பதிவிட்டிருக்கிறது சட்டிஸ்கர் மாநில இடைநிலைக் கல்விக் குழு.

நாட்டின் மொத்த ஸ்டீல் உற்பத்தியில் முக்கியப் பங்களிக்கும் ஒரு மாநிலத்திலிருந்து இப்படி ஒரு துருப்பிடித்தக் கருத்து.

#2
நாட்டின் பிரபலமான பத்திரிக்கைக் குழுமங்களின் ஒன்றான குமுதம் தனது சமீபத்திய ரிப்போர்ட்டர் பதிப்பின் முதல் பக்கச் செய்தியாக எடுத்துக்கொண்டிருக்கும் விஷயமும் அதை கையாண்டிருக்கும் விதமும் மிகவும் கீழ்த்தரமாகத் தெரிகிறது. “லெகின்ஸ் ஆபாசம் – எல்லை மீறும் இளசுகள்” என்ற வரிகளோடு அட்டையில் அவர்கள் பயன்படுத்தியிருக்கும் புகைப்படம் பெரும் கண்டத்திற்குள்ளாகி வருகிறது.

பெண்ணுரிமை பெண்சுதந்திரம் மகளிர் மேம்பாடு என ஒரு பக்கம் வாய்கிழியப் பேசிக் குவிக்கும் பத்திரிக்கைத்துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் குமுதம் இப்படிச் செய்திருப்பது, என்னதான் முற்போக்குச் சிந்தனையாளர்களாக வெளியில் காட்டிக் கொண்டாலும், இன்னமும் ஓர் ஆணாதிக்கவாத, குறுகிய மனப்பான்மையுடையச் சமூகமாகத் தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையே உணர்த்துகிறது.

காற்று வீசும் ஏதோவொரு நொடிக்காக, எங்கோ தொலைவில் ஒளிந்துக் காத்திருந்த வக்கிரப் புத்திக்காரர்கள் கையில் இயங்கிய கேமிராக்கள் கண் சிமிட்டியதில் சிக்கியக் காட்சிகளை இப்படி வியாபாரம் செய்ய முயற்சி செய்திருக்கும் குமுதத்திற்கும், பிரபல நடிகைகள் குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரும் அயோக்கியனுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாய் தெரியவில்லை. இதில் உச்சக்கட்ட வேதனை என்னவெனில், குமுதத்தின் இச்செயலை கண்டித்து சமூக வலைத்தளங்களில் உலவும் பதிவுகளின் பின்னூட்டங்களில் சில ஆண் (அ)சிங்கங்கள் வெட்கமே இல்லாமல் கர்ஜித்திருப்பது தான்.

காலம் காலமாக வயக்காட்டில் கோவணத்தோடு வேலை செய்யும் ஒரு விவசாயியை எந்தப் பத்திரிக்கையும் இப்படிக் கேள்வி கேட்டதாய் நினைவில் இல்லை. எந்தெந்த வேலைக்கு எந்தெந்த உடை யார் யாருக்குச் சௌகரியமோ, அதை அவர்கள் அணிந்துக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக உடையென்பது உடுத்துபவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. நீ இதை அணி, நீ அதை அணியாதே என்று சொல்ல இங்கு யாருக்கும் உரிமை கொடுக்கப்படவில்லை. பெண்களைக் கேள்வி கேட்கும் இத்தகைய கீழ்த்தரமான வாய்ப்பிற்காகக் காத்திருக்காமல் அவர்களை மதிக்கப் பழக வேண்டும் இச்சமுதாயம், குறிப்பாக ஆண்கள். என்னைப் பொருத்தவரையில் அதில் தான் உண்மையான ஆண்மையும் வாழ்கிறது.

பை தி வே, நீண்ட நாட்களாகவே தினசரி நாட்டு நடப்புகளில் என்னை பாதிக்கும் செய்திகளை, அதன் மீதான எனது விருப்பு வெறுப்புகளை எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்ததன் விளைவு தான் இந்த ‘எங்கே போகிற தெந்தன் தேசம்’. தொடர்ந்து எழுத முடியும் என்ற நம்பிக்கையில் தொடங்கியிருக்கிறேன்.

Tuesday, September 22, 2015

தேவதைகளின் இளவரசி – 11

உலகின் மிக
அழகான கைவிலங்கு,
அயன்றுறங்கும் மகளின் கைகளால்
பிண்ணப்படுகிற தென்பதை
உணரச் செய்த நேற்றைய இரவில்..
ஆயுளுக்கும் கைதியானேனடி!