நேற்று மாலை செய்தி கேட்டதிலிருந்து எனது வருத்தங்களாய் Facebookல் நான் எழுதியவை, எழுதிக்கொண்டிருப்பவை..
கலாம் அவர்கள் பற்றி பேச, பகிர, தெரிந்துக் கொள்ள, பின்பற்ற இன்னும் எவ்வளவோ மிச்சமிருக்கின்றன. அவற்றை நேரம் கிடைக்கும்போதெல்லாம், இதயம் கேட்கும்போதல்லாம் எனது அனுபவங்களாய் இந்தப் பதிவில் இணைக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன்.
நீங்களும், விருப்பமிருந்தால், பின்னூட்டங்களாய் இட்டுச் செல்லுங்கள்.
கலாம் ஃபார் ஷ்யூர் வில் லிவ் ஃபாரெவர்!!
#1
கலாம் ISROவின் உறுப்பினராக எப்படியும் தொடரத்தான் போகிறார்.
Indian –> Indhiraloga
#2
தீர்ந்துப் போனது..
காலம் மட்டும் தான்!
கலாம் அல்ல!!
#3
In a nation which celebrates democracy, for having done just his duty in a position that is absolutely ‘for the people’, one remembered, by all, as below, speaks volumes about how genuinely clean, unparalleled and unaffected the person has been throughout on otherwise acutely corrupted grounds.
Kalam, the people’s President??
To me, he is the first REAL President.
#4
அப்துல் கலாம் அவர்களை விரும்பாதவர்கள் என இத்தேசத்தில் யாரும் இருத்தல் சாத்தியம் இல்லை என்பதே ஒரு ஆசிரியர், தலைசிறந்த விஞ்ஞானி, முன்னாள் ஜனாதிபதி என்பதையெல்லாம் மீறிய எவ்வளவு சிறந்த எளிய மனிதராக அவர் வாழ்ந்திருக்கிறார் என்பதை விளக்குகிறது.
#5
பள்ளியிலாகட்டும், கல்லூரியிலாகட்டும், ஆரம்பக் கால அலுவலக வாழ்கை வரை, ஏன் இன்றும் கூட எப்போதாவது அது தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.
உங்களுக்கெல்லாம் அப்துல் கலாமை, பெயரளவிலாவது, எந்த வயதிலிருந்து தெரியும்?
அவருடைய முதல் அறிமுகம் அவரை யாராகக் காட்டியிருக்கிறது?
ஒரு நாளில், அதிகபட்சமாக, சுமார் எத்தனை முறை அவர் பெயரை, நீங்களோ அல்லது மற்றவர்கள் உங்களிடமோ சொல்லி கேட்டிருக்கிறீர்கள்?
இந்த மூன்று கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் விடைகளுக்கும் என் விடைகளுக்கும் இடையேயான தூரம் அவர் கண்டுப்பிடித்த ஏவுகணைகள் இதுவரை கடந்திருக்கும் தூரமாகக்கூட இருக்கலாம்.
அவர் APJ
நான் ABJ