Wednesday, November 27, 2013

விவாகம் + ரத்து + ஏன்?

முன்பை விட அதிக எண்ணிக்கையிலான காதல் திருமணங்கள் விவாகரத்தில் (பெரும்பாலானவை ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே) முடிவதாக ஒரு பதிவில் படித்தேன். காதலுக்கு இது சோகமான விஷயம் தான். காதலிக்கும் போது கல்யாணம் செய்துகொள்ளத் தோன்றும் பலருக்கு, கல்யாணம் செய்து கொண்ட பிறகு காதலிக்கத் தோன்றுவதில்லையோ என்ற சந்தேகம் தான் வருகிறது.

இந்த உலகில் பிரிந்த நண்பர்கள் சேர்ந்துக்கொள்ளும் அளவிற்கு பிரிந்த காதலர்களோ தம்பதிகளோ சேருவதில்லை. வாழ்க்கைத் துணையும் நாமும் நல்ல நண்பர்களாய் இருத்தல் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்த இதைவிட ஒரு பெரிய புள்ளி விவரம் தேவையென்று தோன்றவில்லை.

No comments:

Post a Comment