Monday, September 30, 2013

ராஜா ராணி!!

கடந்து மூன்று நாட்களாய் முகப்புத்தகத்தின் எனக்குத் தெரிந்த பெரும்பாலான சுவர்கள் மீது ஒரே காதாலாய் பூசப்பட்டிருக்கிறது.

சிலர், வீட்டின் பின்புற புழக்கமில்லா அறையில் பழைய தட்டுமுட்டுச் சாமான்களோடு போட்டு வைத்த தங்களின் காதல்களை எல்லாம் தேடி எடுத்து, யாரேனும் பார்க்கிறார்களா என்ற விழிப்புடன், தூசு தட்டி, கண்கள் ஈரம் கொள்ள, சில நிமிடங்கள் கட்டித் தழுவியிருந்தார்கள்.

நிஜத்தில் இறந்திருந்தாலும், அவரவர் நினைவுகளில் இன்னும் அந்தக் காதல்கள் எல்லாம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதற்குச் சாட்சியாய் ஒரு சில முத்தங்கள் கூட அவற்றின் மீது பதிந்திருந்தார்கள்.

காதலிடம் போராடித் தோற்ற ஒரு சிலர் இம்முறை ஒரு வெற்றிக்குத் தங்களை தயார் படுத்தத் தொடங்கியிருந்தார்கள்.

இன்னும் ஒரு சிலர், கல்யாணம் குழந்தைகள் எனக் கண்ட பின்பும் காதலின் ‘கா’ கூடத் தெரியாமல் இதுவரை வாழ்ந்துவிட்டோமே என வெட்கித் தலை குனிந்திருந்தார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக வீன்வாதத்திற்காவது காதலை வம்புக்கு இழுக்கும் சிலரும்கூட, காதல் மோதி கவிழ்திருந்ததோடு இல்லாமல், அவர்களைத் தட்டி எழுப்பிப் பார்த்தபோது, காதலுக்கே உரித்த பாணியில் முகம் முழுக்கப் பற்கள் கொண்டு வழிந்து கொண்டிருந்தார்கள்.

ராஜாராணி, காதலை காதலாகவே கொடுக்க முயற்சித்திருக்கும் ஒரு படம்.

No comments:

Post a Comment