Tuesday, October 1, 2013

உலக முதியோர் தினம்!

நம்மில் யாரும் பற்கள் இழந்த நம் பொக்கை வாய் எப்படி இருக்குமென யோசித்துப் பார்ப்பதில்லை. நடக்க முடியாமல் போக தடி ஊன்ற வேண்டி வருமே என உணர்வதுமில்லை. நரை தட்டும், பார்வை மங்கும், கேட்கும் திறன் குறையும், தோல் சுருங்கும் என எதையுமே நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. ஒவ்வொரு வேளைக்கும் ஒரு தட்டுச் சோறுக்காக இன்னொருவரை எதிர் பார்க்கும் நிலையே ஒரு கொடுமையென நாம் என்றுமே புரிந்து கொள்வதில்லை. தான் பெற்றதுகளே தன்னை வளர்க்க மறுத்ததில் அநாதைகளாகி, கோயில்களில், பிரம்மாண்டக் கடைகளின் வாசலில், பேருந்து நிறுத்தங்களில், நடைபாதைகளி்ல், சாலைச் சந்திப்புகளில் தேங்கும் கார்களின் கண்ணாடி ஜன்னல்களுக்கு வெளியில், எச்சில் இலைகள் குவியும் குப்பைத் தொட்டிகள் பக்கத்தில் என எங்கும், ஒட்டிக் கொண்டிருக்கும் தனது மிச்ச உயிருக்காகக் கையேந்தும், சில நேரங்களில் வயிற்றைத் தடவிக் காட்டி கைகள் கூப்பும் ஜீவன்களாக பல அப்பாக்களையும் அம்மாக்களையும் கண்டும் காணாதபடி நாம் கடந்து சென்று கொண்டே தான் இருக்கிறோம்.

No comments:

Post a Comment