பெற்றோர், நண்பன், காதலி, மனைவி, குழந்தைகள் இப்படியாக எல்லோரும் துணை தான். ஆனால், இவர்கள் எல்லோரும் உணர்வுகள் கொண்டவர்கள், காயப்படும் இயல்புடைய உள்ளம் படைத்தவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக எமனுக்குக் கடன் பட்டவர்கள், எப்போது வேண்டுமானாலும் தனிமையைப் பரிசளித்துவிட்டு கையசைத்து விடுவார்கள். உங்களின் விருப்பங்கள் பற்றியெல்லாம் யோசிக்கும் அளவிற்கு இங்கு யாருக்கும் நேரம் இருப்பதில்லை. உண்மையில், நேரம் கொடுக்கப்படவில்லை.
சில சமயங்களில், நம்மையும் மீறி, நாமே அறியாமல், நாம் சுயநலமாக நடந்து கொள்வதுண்டு. அப்படி நான் செய்தது தான் இந்தத் தமிழ் மீதான என் காதல் என நினைக்கிறேன். எப்படி யோசித்துப் பார்த்தாலும் இரண்டே காரணங்கள் தான் தோன்றுகிறது. ஒன்று, மொழிக்கு உயிர் வரையறை கிடையாது, எனது விருப்பமின்றி என்னை எப்படியும் பிரியாது. இரண்டு, தனிமையை என் விருப்பத்திற்கு மாற்றியெழுத எனக்கு ஒரு துணை. போதுமே!
No comments:
Post a Comment