என் திருமண அழைப்பிதழுக்காக நான் எழுதியது.
“என் வாழ்வின்
இரண்டாம் அத்தியாயம்,
இங்கே தொடங்குகிறது!
பிறருடையச் சரிகளிலும்
எம்முடையச் சரிவுகளிலும்
கற்றுக் கொண்டவையோடு,
இந்த பயணத்தின் முதல் அடி,
இதோ..
எடுத்து வைக்கிறோம்..
மிகக் கவனத்தோடு!!
இந்த பூலோகத்தின்
வெவ்வேறான இரு புள்ளிகளை,
கோர்க்க நினைத்த
ஒரு விஞ்ஞான நிகழ்வாகவே..
எங்களின் முதல் சந்திப்பினை
அறிமுகப்படுத்த விரும்புகிறோம்!
பிஞ்சு குழந்தைகள்,
நடக்க முயற்சிக்கும் தொடக்கத்தில்..
தத்தி.. துவண்டு.. விழும்!
அப்படிப்பட்ட ஒரு மழலைக்கு,
ஒரே நேரத்தில்..
ஒரு பக்கம் நானும்,
மற்றொரு பக்கம் இவளும்,
விரல் கொடுத்து நடை பழக்கியது..
ஒர் ஆச்சர்யமான் இன்பம்!!
விழவிருக்கும் மூன்று முடிச்சுகளும்,
மேளச் சத்தமும்,
மங்கள அரிசியும்,
தங்களின் வருகையோடும்,
மனம் தொட்ட வாழ்த்துகளோடும்,
முழுமை பெறட்டும்!!
மிக ஆவலாய் எதிர்நோக்கும்..
நானும்.. என் அவளும்!! “
No comments:
Post a Comment