நானும் பல காலமாகக் கவனித்து வருகிறேன். நான்கு வரிகளுக்கு மிகாமல் எழுதப்படும் கவிதையைப் படிக்க நாற்பது நபர்கள் மிகச் சுலபத்தில் கிடைக்கும் இதே உலகில், நாற்பது ஏன் இருபது வரிகள் மீறினாலே ஒரு சில கவிதைகள் காண்பாரற்றுக் கிடக்கும்படி ஆகிவிடுகிறது. அப்படியே வாசிக்கும் ஒரு சிலரும், நுனிப்புல் மேய்வது போல, அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவரவரை ஈர்க்கும் சில வார்த்தைகள் மட்டும் தேர்ந்தெடுத்துக் கொய்தெடுத்துவிட, கவிதையின் உருவம் சிதைவதோடு அங்குப் படைப்பின் நோக்கமும் உயிரிழக்க நேரிடுகிறது. சிறுகதைகள், நாவல்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் இதே நிலை தான். வாசிப்போர் எண்ணிக்கை, படைப்பின் நீள எதிர் விகிதத்திலேயே அமைவது, இலக்கியம் மீதான ஏதோவொரு பூர்வ ஜென்மப் பகையை, கணிதம் இப்படித் தீர்த்துக் கொள்கிறதோவென எண்ண வைக்கிறது.
No comments:
Post a Comment