ருமானிய கிருத்துவத் துறவி ஒருத்தர் தன் நாட்டுப் போர் வீரர்களுக்கு அரசு விதிமுறைகள் மீறி திருமணம் நடத்தி வச்சிருக்காரு. அதுல காண்டான அந்நாட்டு அரசர் துறவிக்கு மரண தண்டனை விதிச்சு ஜெயில்ல தூக்கிப் போட்டிருக்காரு. உள்ள இருந்த நேரத்துல சாகக் கிடந்த ஜெயிலரோட பொண்ண நம்மாளு காப்பாற்றியதாகவும், தன்னோட மரண தண்டனை நிறைவேற்றபட இருந்த நாள் ல அந்தப் பொண்ணுக்கு ஒரு ‘லெட்டர்’ எழுதியதாகவும் சொல்றாங்க. அது வெறும் நல விசாரிப்புடனான விடைபெறுதலுக்கான ஒரு கடிதம் தான் னு ஒரு செய்தியும், அப்பெண் மீதான துறவியின் விருப்பம் தாங்கிய ஒரு காதல் கடிதம் னு மற்றொரு செய்தியும் இணையத்துல பார்க்க முடியுது. இதுல எது உண்மை னு இதுவரைக்கும் யாராலையும் உறுதியா சொல்ல முடியல.
இதெல்லாம் நடந்திருப்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பான ஏதோவொரு பிப்ரவரி 14 ல். அதன்படியே ஒவ்வொரு வருடமும் அதே நாளை அத்துறவியை நினைவு கொள்ளும் தினமாக கடைப்பிடிக்கப் பட்டிருக்கு. Valentine என்ற ஒரு பொதுவான பெயர் துறவிகளைக் குறிக்கப் பயன்பட்டு வந்ததால அப்படியே Valentine’s Day ஆகியிருக்கு.
No comments:
Post a Comment