Tuesday, February 17, 2015

தேவதைகளின் இளவரசி – 5

ஒரு பட்டுப் பூச்சியிடம்
இரவல் பெற்ற சிறகொன்றில்
கொட்டிக் கிடக்கும் வர்ணங்கள் அள்ளி,
என் சின்னவளுக்கோர் பிரத்யேக
ஆடை நெய்திட
ஆசை கொள்கிறது மனம்!

ஆனால் அவள்..
அதை வேண்டாமென்றே
சொல்லப் போகிறாள்!

“பட்டுப் பூச்சி பாவம் பா!”
எனக் கொஞ்சுவாள்.

அப்படியே அம்மா புத்தி!!

No comments:

Post a Comment