தவறுதல் மனித இயல்பு. அதை உணர்தல் மனிதக் கடமை.
செய்யும் தவறு எண்ணி வருந்தும் ஒவ்வொரு உயிருமே மன்னிக்கப்பட தகுதி பெறுகிறது. ஆனால் மன்னிப்புகள் அவ்வளவு சுலபத்தில் கிடைப்பதில்லை. சிலர் அலைகிறார்கள். சிலர் அழுகிறார்கள்.
மண்டியிட்டப் பிறகும் முகத்தில் எச்சில் உமிழப்படுகிற தருணங்களையெல்லாம் கடந்து வர வேண்டிய கட்டாயத்தில் சில உயிர்கள். விரக்தியின் கை ஓங்கும் இடமும் இது தான். விளைவு, சில உயிர்கள் உறவையும் சில உயிர்கள் உலகையும் விட்டு வெளியேறுகின்றன.
‘கல் நெஞ்சக்காரர்கள்’ என நமது திருப்திக்கு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். உண்மையில், இதில் பிறர் மீது எந்தத் தவறுமில்லை.
மன்னிப்பு கிடைக்காத இடத்தில் மன்னிப்பு கிடைக்காது எனத் தெரிந்திருந்தும் திரும்பத் திரும்ப தவறு புரிதல் யாருடைய பிரச்சனை? எந்த மாதிரியான ஒரு அலட்சியம்?
No comments:
Post a Comment