தெருமுனை விளக்குக் கம்பத்தில் சாய்ந்தபடி
யாரோ ஒருவர் உட்கார்ந்திருந்தது போல தெரிய,
அருகில் சென்று பார்த்தபோது.. அது நீ!
யாரோ ஒருவர் உட்கார்ந்திருந்தது போல தெரிய,
அருகில் சென்று பார்த்தபோது.. அது நீ!
‘என்னடா இங்கு.. அதுவும் இந்த நேரத்துல’
எனக் கேட்க
நீ அழத் தொடங்கினாய்.
எனக் கேட்க
நீ அழத் தொடங்கினாய்.
உன் விசும்பல் சத்தம்
மொத்த வீதியின் அமைதியையும் விழுங்கத் தொடங்கியதறிந்து,
‘சரி வா.. பன்னென்டு ஆய்டுச்சு..
வீட்டுக்குப் போய் பேசலாம்’
உன் கை பிடித்து இழுத்தேன். நீ வர மறுத்தாய்.
மொத்த வீதியின் அமைதியையும் விழுங்கத் தொடங்கியதறிந்து,
‘சரி வா.. பன்னென்டு ஆய்டுச்சு..
வீட்டுக்குப் போய் பேசலாம்’
உன் கை பிடித்து இழுத்தேன். நீ வர மறுத்தாய்.
உன் விரல்களுக்கு நடுவில் சிகரெட் சுட்ட வடு,
உனது மறுகை கொண்டிருந்த மதுவில் குளித்து
என்னிடம் பரிதாபம் வேண்டி இழித்தது.
எனக்குக் கோபம் தான் வந்தது.
உனது மறுகை கொண்டிருந்த மதுவில் குளித்து
என்னிடம் பரிதாபம் வேண்டி இழித்தது.
எனக்குக் கோபம் தான் வந்தது.
‘ஏன்டா இப்படிக் குடிச்சே அழியுற’ என்றதும்
ஒரு ஞானச் சிரிப்பு அங்குப் பூத்தது.
‘காதல் மச்சி’ என்ற பிதற்றல் வேறு துணை.
‘அதுக்கு???’ என்றேன் கோபமாய்.
பதில் சொன்னாய் நீயும் மௌனமாய்.
ஒரு ஞானச் சிரிப்பு அங்குப் பூத்தது.
‘காதல் மச்சி’ என்ற பிதற்றல் வேறு துணை.
‘அதுக்கு???’ என்றேன் கோபமாய்.
பதில் சொன்னாய் நீயும் மௌனமாய்.
ஓங்கி அறையலாம் போல இருப்பினும்
அமைதியாகவே உனை தூக்க முயன்றேன்.
‘வா.. வீட்டுக்குப் போகலாம்’ – இது இரண்டாம் முறை.
அமைதியாகவே உனை தூக்க முயன்றேன்.
‘வா.. வீட்டுக்குப் போகலாம்’ – இது இரண்டாம் முறை.
‘விடுறா என்னய..’ – ஒரு அலறல் சத்தம்.
‘அவ போயிட்டா….
என்ன மட்டும் சந்தோஷமா இருக்கச் சொல்லுறியா???
அஞ்சு வருஷம் மச்சி..
அஞ்சு வருஷ லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்’
என லவ்-ஐ ஒரு வழியாய் இழுத்துப் பிய்த்து முடித்தாய்.
எனக்கு சிரிப்புதான் வந்தது.
‘அவ போயிட்டா….
என்ன மட்டும் சந்தோஷமா இருக்கச் சொல்லுறியா???
அஞ்சு வருஷம் மச்சி..
அஞ்சு வருஷ லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்’
என லவ்-ஐ ஒரு வழியாய் இழுத்துப் பிய்த்து முடித்தாய்.
எனக்கு சிரிப்புதான் வந்தது.
லவ் தான்!
அஞ்சு வருஷம், நீ சொல்லும் நல்ல ஆழம் தான்!
ஆனால் அந்த ஆழத்தின்
எத்தனாவது அடிக்குப் போய் தேடினாலும்
உன் இந்த நிலைக்கு நியாயம் மட்டும் கிடைக்காது.
அஞ்சு வருஷம், நீ சொல்லும் நல்ல ஆழம் தான்!
ஆனால் அந்த ஆழத்தின்
எத்தனாவது அடிக்குப் போய் தேடினாலும்
உன் இந்த நிலைக்கு நியாயம் மட்டும் கிடைக்காது.
உனை வேண்டாமென விட்டுச் சென்றவளுக்காக
உயிர் வேண்டாமென அதை நீ விற்றுக் குடிப்பது
கண்டிப்பாக காதல் இல்லை!
முட்டாள் தனத்திற்கு முப்பாட்டன் முறை தான் வரும்!!
உயிர் வேண்டாமென அதை நீ விற்றுக் குடிப்பது
கண்டிப்பாக காதல் இல்லை!
முட்டாள் தனத்திற்கு முப்பாட்டன் முறை தான் வரும்!!
நீ வருவது போல தெரியாததால்,
நான் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.
வழியில்,
உன் வீட்டு வாசல் முன் உன் அம்மா,
‘நீ எப்படியும் இப்படித்தான் போவ னு காத்துட்டிருந்தேன்.
நாளைக்கு அவனுக்கு திதி ப்பா..
ஞாபகப் படுத்தலாம் னு தான்’ என முடித்தாள்.
நான் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.
வழியில்,
உன் வீட்டு வாசல் முன் உன் அம்மா,
‘நீ எப்படியும் இப்படித்தான் போவ னு காத்துட்டிருந்தேன்.
நாளைக்கு அவனுக்கு திதி ப்பா..
ஞாபகப் படுத்தலாம் னு தான்’ என முடித்தாள்.
‘மறக்கல மா.. வந்துடுறேன்..’
எனச் சொல்ல அவள் தலையசைத்தாள்.
என் கால்களும் அசையத் தொடங்கின.
அழ நிறுத்தியிருந்த கண்கள்
மீண்டும் தயாராகிக் கொண்டிருந்தன.
.
.
.
.
.
.
.
‘பிளடி டாக்.. செத்துப் போயிட்டான்!’
எனச் சொல்ல அவள் தலையசைத்தாள்.
என் கால்களும் அசையத் தொடங்கின.
அழ நிறுத்தியிருந்த கண்கள்
மீண்டும் தயாராகிக் கொண்டிருந்தன.
.
.
.
.
.
.
.
‘பிளடி டாக்.. செத்துப் போயிட்டான்!’
No comments:
Post a Comment