Thursday, October 10, 2013

முதல் துரோகம்!

இந்த உலகின் முதல் துரோகம் யாரால் நிகழ்ந்திருக்கும்? எவருக்கிடையில் அல்லது எதற்கிடையில் அது நடந்திருக்கும்?அது எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்? அந்த வலி எப்படி இருந்திருக்கும்? அந்த துரோகத்திற்கு தண்டனை என்னவாக இருந்திருக்கும்?

விஜய் டிவியின் ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ பிரபலமும், சன் நியூஸ் செய்தி வாசிப்பாளருமான திரு. நெல்சன் அவர்கள் முன் வைத்திருந்த கேள்விகள் இவை. அவர் கேட்டிருந்த இந்த கேள்விகள் போக, இதை படித்த போது எனக்குள் வேறு நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. எல்லாவற்றையும் ஒரே பதிவு மூலம் விவாதிக்க முடியும் என்று தோன்றவில்லை. இருப்பினும், எழுதத் தூண்டும் தலைப்பு இந்த முதல் துரோகம். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இதைப் பற்றிய ஒரு தனி கதை இருக்கும். விரைவில் அப்படி ஆழமாய் அலசிப் பார்க்கும் ஒரு பதிவையும் எழுத ஆவலாய் இருக்கிறேன். நேரம் கை கொடுத்தால் சீக்கிரமே பதிவிடுகிறேன். அதுவரையில் என்னால் முடிந்தது திரு.நெல்சனின் கேள்விகளுக்கு நான் எழுதியிருந்த பதிலை இங்கே உங்களோடு பகிர்வது மட்டும் தான்.

“சுயநலத்தின் பிறப்பால், நம்பிக்கை வைத்திருந்த ஒருவருக்கும் அந்த நம்பிக்கைக்குச் சொந்தக்காரருக்கும் இடையில், விவரிக்க முடியாத ஒரு அசிங்கமாய், உயிரையே திருப்பிப் போட்ட ஒரு வலி தந்து நிகழ்ந்திருக்கும் அந்த முதல் துரோகம், கண்டிப்பாக தண்டனை பெற்றிருக்காது, மாறாக, அதுவரையில் யாராலும் அசைத்திட முடியாமல், பெருமிதத்தோடுச் சிரித்துக்கொண்டிருந்த அந்த நம்பிக்கையை அது தண்டித்திருக்கும், கொஞ்சமும் கருணையில்லாமல் கொன்று போட்டிருக்கும்.”

No comments:

Post a Comment