நண்பர்களின் பிறந்தநாளுக்கு அவர்களை ஃபோனில் அழைத்து ‘ஹாப்பி பர்த் டே’ எனச் சொல்லிவிட்டு, அதன் பிறகும், ‘இன்னைக்கு என்ன ஸ்பெஷல்’, ‘கோயிலுக்கு போகலயா’, ‘டின்னருக்கு என்ன பிளான்’ என அந்நாளின் கொண்டாட்டங்கள் சுற்றியே பல மணி நேரங்கள் பேச முடியும்போது, அப்பா அம்மாவின் பிறந்தநாளுக்கு மட்டும் ஃபோன் செய்த கையோடு, ஒரு ஹாப்பி பர்த் டே சொல்லி முடித்தும் முடிக்காகததுமாய், “அப்புறம்..” என்று ஒரு நாட்டு நடப்புக்கோ, அன்றைய சமையல் கதைக்கோ உடன் தாவி விடுகிற அளவில் தான் நாம் நம் எதார்த்தத்தை நிரூபிக்க முயல்கிறோம்.
நெருங்கிய நண்பன், நெருங்கிய தோழி என சொல்வதில் இல்லாத ஒரு கூச்சம், நமது இரத்தச் சொந்தங்களுடனான நம் நெருக்கத்தை விவரிக்க முயற்சிக்கையில், கண்கள் எட்டாதத் தூரத்திலிருந்து ஓடி வந்து நம் மீது சட்டென்று ஏறிக் கொள்கிறது.
பி.கு: இவையெல்லாம் உணராமல் சொல்லப்படாத காதல்களுக்கு இன்றளவும் நாம் ‘இதயம்’ முரளியை கலாய்த்துக் கொண்டிருக்கிறோம்.
No comments:
Post a Comment