இந்த சமூகம் இன்னும் ஆண் ஆதிக்கத்தில் தான் இயங்கி வருகிறது என்பதை நாம் எப்போதெல்லாம் மறக்கிறோமோ, அப்போதெல்லாம் ஒரு பாலியல் பலாத்காரச் செய்தி நம்மை துளைக்கிறது. இப்படிப்பட்டக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்களை திட்டும் போதுகூட, ‘இவனெல்லாம் நல்ல குடும்பத்துல பொறந்திருக்க மாட்டான்’ என்று மறைமுகமாக ஒரு பெண்ணையே குறை கூறும் அளவில் தான் இன்னும் இந்தச் சமூகம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. பெண்களின் மீதான ஈர்ப்பு போல, இந்த ஆண் ஆதிக்க உணர்வும், ஆண்களின் மரபணுக்களில் ஊடுருவிவிட்ட ஒரு விஷயமாக மாறியிருக்கிறதோ என்ற அச்சம் வருகிறது.
நம் வீட்டில் உள்ள பெண்களை நாம் ஒழுங்காக நடத்தாத வரையில் நாட்டிலுள்ள பெண்களை நாடும் மரியாதையாய் நடத்தாது என்பதை ஒவ்வொரு ஆணும் உணரும் நாள் என்று வருமோ?
கொஞ்சம் உறைக்கும்படிச் சொல்வதானால், வீட்டில் இருக்கும் பெண்ணை ஒரு நாயை போல நாம் கடித்தால், நாளை தெருவில் இறங்கி நடக்கையில், வேறொரு சொறி நாய் அவளை கடிக்காது என்ற எந்த நிச்சயமும் இல்லை.
செய்தி: திருநள்ளாறில் தோழிக்காக காத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை பதினைந்து பேர், மொட்டை மாடி, சுடுகாடு என மூன்று வெவ்வேறு இடங்களில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment