சனிக்கிழமை கடற்கரைக்குச் சென்றிருந்த போது, ஒரு சிறுமி, ‘இந்த ஸ்டிக்கர் வாங்கிக்கோ கா.. பத்து ரூவா தான் கா.. ப்ளீஸ் கா..’ என்றதும், என் மனைவி, ஒரு ஸ்டிக்கர் அட்டையை வாங்கிக் கொண்டு பத்து ரூபாய் கொடுத்தாள். அந்தச் சிறுமி அப்படிப் போனதும், இன்னுமொரு சிறுமி வந்து, எதையோ நீட்டி வாங்கிக்கக் சொல்லி, ‘பத்து ரூவா தான் கா.. ப்ளீஸ் கா’ என்றாள். என்னவள், ‘இல்லம்மா வேண்டாம்’ என்று தவிர்க்க முயன்ற போது. ‘வாங்கலனாலும் பரவாயில்ல கா.. பத்து ரூவா வாச்சும் குடுக்கா’ என்றாள் அந்தச் சிறுமி.
ஒரு முறை, பைக்கில் பயணித்துக் கொண்டிருந்த என் நண்பனை ட்ராஃபிக் கான்ஸ்டபிள் ஒருவர் வழி மடக்கி, ‘லைசன்ஸ் காட்டு’ என்று சொல்லியிருக்கிறார். என் நண்பனும் எடுத்துக் காட்டியிருக்கிறார். வண்டி ஆர்.சி புக், இன்சூரன்ஸ் என அவர் கேட்க, அவற்றையும் காண்பித்திருக்கிறார். ‘எல்லாம் சரியா தான் இருக்கு, பாத்தா படிக்கிற பையன் மாதிரி வேற தெரியுற, அப்புறம் ஏன் பா இப்படி வேகமா போற, சரி சரி, ஒரு அம்பது ரூவா ஃபைன கட்டிட்டுப் போ’ என்று சொல்லி, கையில் அவ்வளவு பணமில்லை என்று சொன்ன என் நண்பனிடம், அவன் வாலட்டில் வைத்திருந்த முப்பது ரூபாயை வாங்கிக் கொண்ட பிறகுதான் விட்டிருக்கிறார் அந்த கடமை தவறாத அதிகாரி.
பை தி வே, நான் சொன்ன இந்த இரண்டு விஷயத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
No comments:
Post a Comment