Monday, December 30, 2013

பிரேக்கப் தியரி

நமக்குள் இனி ஒத்து வராது என்று உணர்ந்து, இருவருமே சம்மதித்துப் பிரிவது தான் பிரேக்கப் ஆக முடியும். ஏதோ ஒருவருக்கு மட்டும் அந்த உணர்வு வந்து, இன்னொருவர் மீது அந்தப் பிரிவு திணிக்கப்படும் போதுதான் ஏகத்துக்கு வலி வரையப்படுகிறது. உறவுகளை இருக்கமாகப் பற்றுதல் கூட ஒரு விதச் சுதந்திர மறுப்பு என்பது முற்போக்குச் சிந்தனையின் ஒரு அங்கமாய், ஒரு பக்கம், எவ்வளவு தான் நியாயமாகப் பட்டாலும், அதற்குப் பிரிவு ஒன்றுதான் தீர்வாக முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதே நேரத்தில், பிரிவது என்பதில் ஒருவர் தீர்க்கமாக இருக்கும்பட்சத்தில், உருகுதலும், உயிர் விடுதலும் முட்டாள்தனம் என்பதில் எனக்கும் நூறு சதவிகித உடன்பாடே.

மனம் விட்டுப் பேசாததால் மட்டுமே விட்டு போன உறவுகள் இங்கு அதிகம் என்றிருக்க, நாம் ஏன் அதைச் செய்துப் பார்க்கக் கூடாது என்று யாருக்கும் தோன்றுவதுமில்லை, அப்படியே தோன்றினாலும், சம்மந்தப்பட்ட இருவரும் ஒரே நேரத்தில் தயாராய் இருப்பதுமில்லை.

என்ன செய்ய, பிக்கப்களுக்கும் எஸ்கேப்களுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டால், பாவம் இந்த காதல், பாடாய்ப் படத் தான் வேண்டும்.

No comments:

Post a Comment