இறை வேண்டுகிறேன்.
இணக்கம் தூண்டுகிறேன்.
நொடி கணமும்
குறையின்றியே நேசிக்கிறேன்.
இணக்கம் தூண்டுகிறேன்.
நொடி கணமும்
குறையின்றியே நேசிக்கிறேன்.
இருந்தும்..
தூரத் தூக்கியெறிய
உனக்குத் தேவைப்படுவதெல்லாம்
ஒரேயொரு கோபம் மட்டும் தான்!!
தூரத் தூக்கியெறிய
உனக்குத் தேவைப்படுவதெல்லாம்
ஒரேயொரு கோபம் மட்டும் தான்!!
கோபம்..
எனக்குத் தெரியும்,
வீரியம் ஏறிய
ஒரு பெரும் வலியின் முகமென்று!
எனக்குத் தெரியும்,
வீரியம் ஏறிய
ஒரு பெரும் வலியின் முகமென்று!
எந்த முகத்தையும் நேருக்கு நேர்
பார்த்துப் பழகியவன் நான்.
நீ காட்டு!
என் பொறுமையுடன் போராடி
முடிந்தால் வென்றுவிட்டுப் போகட்டும்!
ஆனால்,
போய் தொலையட்டும் அது!!
பார்த்துப் பழகியவன் நான்.
நீ காட்டு!
என் பொறுமையுடன் போராடி
முடிந்தால் வென்றுவிட்டுப் போகட்டும்!
ஆனால்,
போய் தொலையட்டும் அது!!
ஏங்கேனும் ஒரு அகண்ட நிலப்பரப்பில்
கால் கடுக்க ஓடி
எல்லையோர நீரற்ற ஆழ்க் கிணறொன்றில்
தலை கீழ் குதித்து
கபாலம் சிதறி மறியட்டும்!!
கால் கடுக்க ஓடி
எல்லையோர நீரற்ற ஆழ்க் கிணறொன்றில்
தலை கீழ் குதித்து
கபாலம் சிதறி மறியட்டும்!!
இந்த வாழ்க்கை..
எந்தன் காதல்..
நம் உலகம்..
இதில் ஒன்றையேனும் சீண்டிப் பார்க்கக் கூட
இங்கு யாருக்கும் அனுமதி கிடையாது
உன் ஒருத்தியைத் தவிர..
எந்தன் காதல்..
நம் உலகம்..
இதில் ஒன்றையேனும் சீண்டிப் பார்க்கக் கூட
இங்கு யாருக்கும் அனுமதி கிடையாது
உன் ஒருத்தியைத் தவிர..
சொல்லி வை!
No comments:
Post a Comment