Thursday, April 17, 2014

எலெக்ஷன் பலியாடுகள்!

கடந்த வாரம் பேருந்தில் பயணித்த போது அருகில் இருந்தவர் அரசியல் தொடர்பானப் பேச்சுகளை மெல்லத் தொடங்கினார். ஒவ்வொரு கட்சியை பற்றியும் நல்லபடியாகச் சொல்ல ஆரம்பித்து முடிக்கையில் காதோடுச் சேர்த்து நம் மூக்கையும் பொற்றிக் கொள்ளும் அளவிற்கு நாறடித்து விட்டார். அரசியல் பேச்சென்பதால் ஆரம்பத்திலிருந்தே விருப்பமில்லை. நானும் குனிந்து நெளிந்து எதிர் திசை திரும்பியென என்னென்னமோ செய்துப் பார்த்தும் அவர் விடுவதாயில்லை. அவர் பேசுவதோடு நிறுத்தினால் கூடப் பரவாயில்லை, ஒவ்வொரு கட்சியைக் கழுவி ஊற்றிவிட்டப் பிறகும், இது நான் நினைக்குறது மட்டும் தான், தம்பிக்கு எப்படி புடிபடுது னு தெரியல என்று என்னையும் கோர்த்து விட்டுக் கொண்டிருந்தார்.

உச்சி வெயிலில் அடைந்தபடி ஓடும் ஒரு தகரடப்பா பேருந்தில் இப்படி ஒரு மனிதருக்கு அருகில் உட்கார வச்சுட்டியே ஆண்டவா என்று கண் மூடிய நான் அதிர்ஷ்ட வசமாக அப்படியே தூங்கிப் போயிருக்கிறேன். நிறுத்தம் வரக் கண்விழித்துப் பார்த்தபோது, மனிதன் முன்னிருக்கைக்கு இடம்பெயர்ந்திருந்தார். பாவம் அங்கு என்னைப் போலவே ஒரு பலியாடு சிக்கி நெளிந்துக் கொண்டிருந்தது.

No comments:

Post a Comment