Tuesday, August 18, 2015

மனிதம் வளர்ப்போம் 2

தாம்பரம் வேளச்சேரி சாலையில் செம்பாக்கத்தையடுத்து கௌரிவாக்கத்தில் பஞ்சமுக ஆஞ்சிநேயர் கோயில் உள்ளது. அம்மாவாசை நாட்களில் அங்கு தேங்காய் கட்டுதல் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வு. பக்தர்கள் தம் மனதில் நினைக்கும் காரியங்கள் நிறைவேற வேண்டி மாதந்தோறும் அம்மாவாசையன்று தேங்காய் கட்டி வந்தால், வேண்டிய காரியம் கைக்கூடும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு அம்மாசையன்று தேங்காய் கட்டும் முன்பும், முந்தைய அம்மாவாசையன்று கட்டிய தேங்காயை அவிழ்த்து உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை வீட்டிற்கு எடுத்து வந்து சம்மந்தப்பட்டவர் உணவில் சேர்த்துக் கொள்வது வழக்கம்.

கடந்து வெள்ளிக் கிழமை அலுவலகம் முடித்து அக்கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு அம்மா தன் மகன் பெயரில் அர்ச்சனை செய்து தேங்காய் கட்ட வந்திருந்தார். அர்ச்சகர் தேங்காயை பெற்றுக் கொள்ளவும் பெயர் நட்சத்திரம் ராசி அனைத்தையும் சொல்லி முடித்தார். “வேண்டுதல் சொல்லுங்கோ” என்றார் அர்ச்சகர். மென்று விழுங்கி “நீங்களே நல்லதுக்கு பண்ணுங்க” என்றாள் அந்தத் தாய். “வேண்டுதல் எதுவும் இல்லையா, சொன்னா பண்ணிடலாம்” என வற்புறுத்த அவளும் பெருந்தயக்கத்துடன் சுற்றியிருப்பவர்களுக்குக் கேட்காத அளவில் ஏதோ கிசுகிசுத்தாள்.

அர்ச்சகர் தன் பங்கிற்கு, “சர்வ கெட்ட பழக்கம் நிவர்த்தி சித்திரத்தம்” என்று உரக்கச் சொல்ல, மொத்தக் கூட்டமும் ஒரு நொடி அந்தத் தாயை தரிசித்துத் தலை குனிய வைத்தது.

உயிரைக் காக்க வல்லவர்களான மருத்துவர்கள் கைவிரிக்கும் வேளையில் மக்கள் தேடிப் போவது கடவுளைத்தான். ஆனால் அவர்களால் அதிகபட்சம் நெருங்க முடிவது இதுபோன்ற அரைவேக்காடு அர்ச்சகர்களைத் தான்.

தலைக்குனிவிற்கு என்னதான் மகன் காரணமென்றாலும், அந்த அர்ச்சகரையும் மன்னிக்க மறுக்கிறது மனம்

No comments:

Post a Comment