Wednesday, October 7, 2015

மெய்யுணர்தல் 10


இன்று காலை, வீட்டருகில் இருக்கும் ஒரு கடைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் ஒரு சிறுவன் தன் அப்பா முதுகில் உப்பு மூட்டையேறியிருந்தான். அவர்களும் வீட்டுச் சமையலுக்குத் தேவையான எதையோ வாங்க கடைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அந்த அப்பா கையில் தொங்கிய பாலித்தீன் கவரில் அப்படித்தான் ஏதோ தென்பட்டது. விஷயம் அதுவல்ல.

குளிரூட்டப்பட்ட BMW, Audi கார்களில் டிரைவர் ஓட்ட அதில் வெறும் பொம்மைகள் போல அமர்ந்து செல்லும் குழந்தைகளுக்கும், அடிக்கும் வெயிலில் இப்படி அப்பாவின் முதுகில் உணர்வுக்குவியலாக சிரித்துக் குலுங்கும் குழந்தைகளுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம். 

ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்வேன். பிறக்கும் குழந்தைகளில் எதுவும் தன் அப்பா பணக்காரனா ஏழையா என்பதெல்லாம் யோசிப்பதில்லை. நிச்சயம் அன்புமிகுந்தவனாக இருப்பான் என்ற ஒரே நம்பிக்கை தான் அவைகளுக்கு.


No comments:

Post a Comment