Thursday, March 13, 2014

சரி கம பத நி ச

‘Fifteen years and still going stronger..’ என்ற தலைப்பில் ஒரு பதிவு. என்னடா என்று பார்த்தால் நமக்கெல்லாம் மிகவும் பரிட்சையமான ஒரு இசையமைப்பாளர் திரைத்துறையில் நுழைந்து பதினைந்து வருடங்கள் வெற்றிகரமாகக் கடந்துவிட்டதாகச் சொல்லப்பட்டிருந்தது.

தமிழில் போட்டதை தெலுங்கிலும், தெலுங்கில் போட்டதையே தமிழிலும் மாற்றி மாற்றிப் போடுவதெல்லாம்… என்று நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. என்னதான் கைவசமிருக்கும் பதினைந்து ட்யூன்களையே திரும்பத் திரும்ப போட்டு வருகிறார் என்றாலும், அந்தப் பதினைந்து ட்யூன்களுமே அசத்தலானவை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

திரைப்படங்களுக்கு இசையமைக்க வந்ததற்குப் பதிலாய், ஒரு மேடைக் கலைஞராக தொடர்ந்திருந்தால், இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தைச் சேர்த்திருப்பார் என்று பல சமயங்களில், குறிப்பாக, இவரது இசை வெளியீட்டு விழாக்களின் போது தோன்றியிருக்கிறது.

சரி கம பத நி ச.. சரி கம பத நி ச.. சரி கம பத நி ச.. யப்பா சாமி.. ஆள விடு!

No comments:

Post a Comment