பள்ளியில் காலை இறைவணக்கக் கூட்டத்தில் ‘இன்றைய சிந்தனை’ என்ற பெயரில் தினமும் ஒரு வாசகம் இடம்பெறும். ஆங்கில வழி பாடம் கற்பிக்கும் முறையை வழக்கத்தில் கொண்டிருந்த ஒரு மெட்டிரிக்குலேஷன் பள்ளி என்பதால், ‘டூடேஸ் தாட் இஸ்..’ என்று ஆரம்பித்து, சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மாணவனோ மாணவியோ மைக் முன் அவதரித்து, பெரும்பாலான நாட்களில் ஊர் பெயர் தெரியாத யாரோ ஒரு வெளிநாட்டுப் பிரபலம் சொன்னதை, மனப்பாடம் செய்தபடி அப்படியே ஒப்பித்துவிட்டு மறைந்துவிடுவர்.
அந்தக் காலக்கட்டத்தில், அப்படிப் பகிரப்பட்ட எந்த ஒரு தாட்-க்கும் முக்கியத்துவம் கொடுத்து உணர முயற்சிக்காத நாம், இன்று வாழ்க்கையில் வெறும் அனுபவங்களை மட்டுமே பரிசளித்திருக்கும் தருணங்கள் பல கடந்து வந்துவிட்ட பிறகு, நம் நிலைக்குப் பொருந்தும் மேற்கோள் சுமக்கும் புகைப்படங்களை தேடிப் பிடித்து, கொஞ்சமும் சலிக்காமல் பேஸ்புக்கில் பகிர்ந்தும், மணிக்கணக்கில் அவற்றையே திரும்பத் திரும்ப வாசித்தும் வலியாற்றிக் கொள்கிறோம்.
எவ்வளவு படித்தும் விளங்கிறாத சில மேற்கோள்களின் அர்த்தம், பட்டால் தான் புரிகிறது.
No comments:
Post a Comment