Wednesday, July 10, 2013

இரக்கம் – அகராதிகளில் மட்டும்..

குரங்கிலிருந்து
மனிதன் வந்தானா?!
நம்ப முடியவில்லை..!
குரங்கிற்கு தான்
இரக்க குணம் அதிகமாச்சே!!

o0o

அன்று..
சாலை விபத்தில்
அடிபட்டவனை,
தூக்க மறுத்துவிட்டேன்!
ஒரு வேளை..
எனக்கு
மனமில்லையோ??!!
அவன் இறந்துவிட்டான்
என்ற செய்து கேட்டதும்
தூங்க மறந்துவிட்டேன்!!
பரவாயில்லை..
மனசாட்சியாவது இருக்கிறதே!!

o0o

காலில் அடிபட்ட,
நாய்க்குட்டி ஒன்று
வலியால்
நொண்டி நடக்கிறது!
நமக்கே உதவ
யாருமில்லை..
நாய்க்கு எங்கிருந்து?!
.
.
நக்கிக்கொள்கிறது!!

No comments:

Post a Comment