ஒரு துளி நீர்,
உன் தொண்டைக்குழி சேரும்வரை..
தாகத்திற்கில்லை விடுதலை!
மண் சேர்ந்த விதை,
நீர் காணும் முன்..
செடிகளுக்கில்லை விடுதலை!
கிழக்கில் உதயமிருந்து,
மேற்கில் அஸ்தமனம் இல்லையேல்,,
இரவுக்குமில்லை விடுதலை!
பச்சிளம் பெண் சிசு,
பூப்பெய்தும் நாள் வரை..
பெண்மை பெறாது விடுதலை!
மூடிய விழிகள் இரண்டும்,
திறக்க மறந்துவிட்டால்..
உயிர் காணாது விடுதலை!
அறுவடை செய்தவனுக்கே
அரிசி கிடைப்பதில்லை..
வறுமைக்கு எங்கிருந்து விடுதலை!
அழுவது கோழைத்தனமென
மேகங்களும் நினைத்துவிட்டால்
மழைக்கு கிடையாது விடுதலை!
பிடித்தவளை பின்தொடர்ந்து
பிரியத்தை தெரிவிக்காவிடில்
காதலுக்குமில்லை விடுதலை!
அன்னைமடி தூக்கம்
அனுபவிக்க இழந்தவனுக்கு
ஏக்கம் தராது விடுதலை!
பத்து மாத தவத்தை
தாய்மை மறுத்துவிட்டால்
உனக்கும் எனக்குமேயில்லை விடுதலை!
பாதுகாப்பென்ற பெயரில்
கம்பிக்குள் அடைத்துவிட்டீர்கள்
இங்கு கடவுளுக்கேயில்லை விடுதலை!
அவனும் ஓர் நாள்
கைவிடத்தான் போகிறான்..
கிடைக்குமன்று உலகிற்கே விடுதலை!
பி.கு: பல வருடங்களுக்கு முன் எழுதியது. எதையோ தேடப் போய் எதுவோ கிடைத்தது என்று சொல்வார்களே, அப்படிக் கிடைத்தது… அப்படியே பதிவிடுகிறேன்.. :)
No comments:
Post a Comment