என் இதயம், ஏற்கனவே
பல கீறல்களைச் சுமந்து துடிக்கிறது!
பல கீறல்களைச் சுமந்து துடிக்கிறது!
என் வலிகளுக்கு இதமளிக்க,
ஓரிடம் கிடைத்துவிட்டதாக நினைக்கையில்..
உன் உள்ளங்கை வெப்பம்,
அவ்வப்போது சுட்டுவிடுகிறது!
ஓரிடம் கிடைத்துவிட்டதாக நினைக்கையில்..
உன் உள்ளங்கை வெப்பம்,
அவ்வப்போது சுட்டுவிடுகிறது!
பழைய கீறல்களுக்கு மேல்
புதிதாய்த் தழும்புகள் வரையப்படுகின்றன!!
புதிதாய்த் தழும்புகள் வரையப்படுகின்றன!!
மருந்து தடவுமென நினைத்த விரல்கள்
மறுமுனையில்,
முகம் திருப்பிப் படுத்துக் கொள்கின்றன!
மறுமுனையில்,
முகம் திருப்பிப் படுத்துக் கொள்கின்றன!
துடிப்பு குறைந்து கொண்டே வருகிறது!
இரத்த குழாய்களுக்குள் அழுத்தம்
அதிகரித்துக் கொண்டே போகிறது!!
அதிகரித்துக் கொண்டே போகிறது!!
உயிர்த்தெழ முடியுமா
என்ற பயம் வேற தொற்றிக்கொள்கிறது!
என்ற பயம் வேற தொற்றிக்கொள்கிறது!
இறக்கவும் தெரியாமல்,
இயங்கவும் முடியாமல்,
என் இதயம் படும் அவஸ்தைக்கு..
‘இருக்கிறான்!’ என்று எல்லோராலும் நம்பப்படும்
இறைவனை நாடுவதைத் தவிர
வேறு வழி புலப்படுவதில்லை!!
இயங்கவும் முடியாமல்,
என் இதயம் படும் அவஸ்தைக்கு..
‘இருக்கிறான்!’ என்று எல்லோராலும் நம்பப்படும்
இறைவனை நாடுவதைத் தவிர
வேறு வழி புலப்படுவதில்லை!!
கை கூப்பி வேண்டுகையில்,
என் மூடிய இமைகளின் இடுக்கிலிருந்து
கசியும் ஒவ்வொரு கண்ணீர்த்துளியும்,
உன் மடியில் படுத்தால் கிடைக்கும்
அரவணைப்பை உணர்த்திவிட்டு,
என் கண்ணங்கள் மேல் காய்ந்து போகிறது!!
என் மூடிய இமைகளின் இடுக்கிலிருந்து
கசியும் ஒவ்வொரு கண்ணீர்த்துளியும்,
உன் மடியில் படுத்தால் கிடைக்கும்
அரவணைப்பை உணர்த்திவிட்டு,
என் கண்ணங்கள் மேல் காய்ந்து போகிறது!!
No comments:
Post a Comment