Thursday, April 18, 2013

பிரிவு!!

உன்னை விடுத்து
விலகி இருக்க வேண்டிய
கட்டாயத் தருணங்களில்..
உனது கோபம்,
கொஞ்ச நேரத்தில்
அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிட்டு,
முதுகு காட்டி நின்றுவிடுகிறது!

பின்னிருந்து கட்டித் தழுவி,
“எனக்கும் கடினம்தானடி!” என
கதறி அழுதிட என் மனமும் முற்படுகிறது!

ஆனால் ஏனோ..
ஒவ்வொரு முறையும்
எனை தடுத்துக் கொள்கிறேன்..!

அக்கணம்,
அங்கு பிறக்கும் நிசப்தம்..
உனது கோபத்திற்கும்,
எனது வலிக்கும்,
மருந்து தடவி விட்டு..
ஓர் ஓரமாய் அதுவும் அமர்ந்து கொள்கிறது!!

No comments:

Post a Comment