நேரமாகி வீடு திரும்பும் இரவுகளில்,
எப்போதாவது நீ..
அசந்து தூங்கியிருப்பாய்!!
வெளிச்சமோ.. சின்ன சத்தமோ..
உன்னை தொட்டிறாத வகையில்,
உடைகளை மாற்றி,
உனதருகில் வந்து படுத்துக் கொள்வேன்!
அதிகபட்சம் ஒரு நொடி..
உனது கைவிரல் என் நெஞ்சை வருடி,
உன் உதடுகள் என்னை கேட்டு விடும்..
“சாப்டியா டா?” என்று.
அங்கு தொடங்கி..
ஒரு சொல்..
ஒரு முத்தம்..
மீண்டும் ஆழ்ந்த உறக்கத்தில் நீ!!!
No comments:
Post a Comment