திரைப்படங்களில் புகை மது ஆகியவற்றை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வதில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை.
ஒரு ராணுவ அதிகாரி, எல்லையில் ஊடுருவல்களை தடுத்து, நாட்டையும் அதன் மக்களையும் எப்படிக் காப்பாற்றுகிறான் என்பது போன்ற தேசப்பற்று மிக்க மயிர் கூச்செரியும் காட்சியமைப்புகள் கொண்ட திரைப்படங்கள் எவ்வளவோ வந்து போயும், எப்படியாவது ராணுவத்தில் சேர்ந்து தாய் நாட்டை காப்பாற்றியே தீருவேன் என எவனும் எல்லைக்கு ஓடியதாகத் தெரியவில்லை.
மாரி போன்ற படங்களில், லோக்கல் தாதாக்களை, தினம் எழுந்ததும் குளித்து முடித்து, நெற்றியில் பொட்டு வைத்து, நெய் வடிய பொங்கல் திங்கும் ஸ்மால் பாயாகவா காட்ட முடியும்? அப்படித்தான் என்றால் புதுப்பேட்டை போன்ற காவியமும், செல்வராகவன் போன்றதொரு படைப்பாளியும் இன்று தமிழ் திரையுலகிற்கு கிடைக்காமலேயே போயிருக்கும்.
பிரம்பு, துப்பாகிகள் எல்லாம் வன்முறைக்கு வழிவகுக்கும் என்று சொல்லி, நாட்டையே உலுக்கிய ஒரு பயங்கர குண்டு வெடிப்பு வழக்கில் கைதியான ஒருவனை போலிஸ் கதாப்பாத்திரங்கள் சுற்றி நின்று ஆளாளுக்கு கிச்சு கிச்சு மூட்டியே உண்மையை வரவழைக்கும் ஒரு கொடூரக் காட்சியை இதுவரை உலக சினிமாவில் எங்குமே படமாக்கப்படவில்லை என்ற நிலையை மாற்றியமைப்போமோ?
சும்மா போங்க சார். கெடுற புள்ள கே.பி.சுந்தராம்பாள் புள்ளையா இருந்தா கூட கெடும்.
No comments:
Post a Comment