Thursday, December 18, 2014

நீ நீயேயில்லை!!

நீ செய்யும் நல்லதை
பிறருக்குத் தெரியப்படுத்தினால்
நீ தற்பெருமைவாதி!

நீ செய்யும் கெட்டதை
பிறருக்குத் தெரியப்படுத்தாமல் விட்டால்
நீ நேர்மையற்றவன்!

சரி நல்லதை
சொல்லாமல் இருப்போமென்றால்
நீ மகாநடிகன்!

கெட்டதையாவது
சொல்லித் தொலைப்போமென்றால்
நீ அயோக்கியன்!

மொத்தத்தில்..
நீ நீயேயில்லை என்பது உணர்க!!

No comments:

Post a Comment