நவம்பர் 5, 2013 எழுதிய பதிவிலிருந்து..
செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கானச் சாத்தியங்களை ஆராய உருவாக்கப்பட்ட இந்தியாவின் 450 கோடி ரூபாய்ச் சொத்து இன்று பிற்பகல் 2:38 மணிக்கு சும்மா ஜொய்ங்குனு கிளம்பிருச்சுங்கிறது தான் செய்தி. அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் இந்த மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை அடையும் என்பது கணிப்பு. அப்படி நடக்கையில், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய கூட்டமைப்பைத் தொடர்ந்து, மார்ஸ் மிஷனை வெற்றிகரமாக முடித்துக் காட்டிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட நாற்பது முயற்சிகளில் சீனாவின் முயற்சி உட்பட மொத்தம் இருபத்து முன்று முயற்சிகள் மண்ணைக் கவ்வியிருக்கின்றன என்ற உண்மை இந்த மிஷன் எவ்வளவு சவாலானது என்பதை ஒரளவிற்கு உணர்த்தவே செய்கிறது.
செப்டம்பர் 25, 2015 – இன்று
மங்கள்யான் செவ்வாய் கிரகச் சுற்றுப் பாதையை அடைந்து நேற்றோடு ஒரு வருடம் நிறைவானது. 2013 நவம்பர் 5ஆம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்டிருந்தாலும் நவம்பர் 29 வரை பூமியின் சுற்றுப்பாதையிலே இருந்து தனது அடுத்தக்கட்ட மிக முக்கியப் பயணத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டு, இந்திய நேரப்படி நவம்பர் 30 காலை 5:30 மணிக்கு தனது செவ்வாய் கிரகப் பயணத்தை தொடங்கிய மங்கள்யான், 298 நாட்கள் விண்ணில் பயணித்து செப்டம்பர் 24, 2014 ஆம் தேதி செவ்வாய் கிரகச் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது.
மங்கள்யானின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை கொண்டாடும் வகையில், இந்த ஒரு வருடத்தில் மங்கள்யான் எடுத்த சில புகைப்படங்களை ISRO “Mars Atlas” என்ற தொகுப்பாய் வெளியிட்டுள்ளது. அதை தரவிறக்கம் செய்ய விரும்புவோர் இங்கே க்ளிக் செய்யவும்.
வெல்டன் மங்கள்யான் and டீம்!
கூடுதல் செய்தி:
ISRO தனது செவ்வாய் கிரக ஆராய்ச்சியின் இரண்டாம் கட்டத் திட்டமான மங்கள்யான் 2 விண்கலத்தை 2018-2020 ல் செவ்வாய் கிரகச் சுற்றுப்பாதையில் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை, அது செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கவும், NASA வின் Curiosity போன்றதொரு Mars Rover ஐ நிறுவவும் திறன் கொண்டிருக்கும்.
No comments:
Post a Comment